தெருக்களில் அனாதைகளாக குழந்தைகள்! வடகொரியாவில் பட்டினி கிடக்கும் மக்கள்
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வடகொரியாவில் மக்கள் பட்டினி கிடக்கும் அவலநிலை நேர்ந்துள்ளது.
தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்ததால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதன் காரணமாகவும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் வடகொரியாவில் மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் இதுபற்றி குறிப்பிடுகையில், தெருக்களில் அனாதை குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. அடித்தட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது” என தெரிவித்தார். மேலும் வரவிருக்கின்ற அறுவடையை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், அறுவடையின்போது இழப்புகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட பொதுமக்கள் அனைவரும் குறைவாக சாப்பிட வேண்டும் என அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.