வடகொரிய அதிபர் கிம்மின் அதிரடி அறிவிப்பு!
இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.
வடகொரியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்று 10 ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்திலேயே கிம் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர், மேலும் தெரிவிக்கையில்,
வடகொரியாவின் 2022ஆம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமும் தான் என கிம் கூறினார். அத்துடன் வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என்றும், வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் , கொரிய தீபகற்பத்தில் வளர்ந்துவரும் நிலையற்ற இராணுவச் சூழல் காரணமாக, வடகொரிய அரசு தனது பாதுகாப்புத் திறனை தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் கிம் குறிப்பிட்டார்.