குழந்தைகளை கண்டு பிடிக்க உதவுவோருக்கு வெகுமதி அறிவிப்பு
நோவா ஸ்கோஷியாவின் பிக்டோ கவுண்டியில் காணாமற்போன லில்லி சுலிவன் (வயது 6) மற்றும் ஜாக் சுலிவன் (வயது 4) ஆகிய இருவரைப் பற்றிய தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டள்ளது.
மாகாண அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மாகாணத்தின் ‘பெரிய தீர்க்கப்படாத குற்றங்களுக்கு தகவல் வழங்கும் திட்டத்தில்’ (Rewards for Major Unsolved Crimes Program) இந்த சம்பவமும் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல் வழங்கும் நபருக்கு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் டாலர் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 2ம் திகதி முதல் இந்த குழந்தைகளை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வீட்டில் அல்லது சுற்றுவட்டார நிலப்பரப்பில் எங்கும் காணப்படவில்லை. அவர்கள் காட்டிற்குள் தவறிவிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்தச் சாட்சியங்களும் கிடைக்கவில்லை. மே 1ஆம் திகதி பிற்பகலில், குழந்தைகள் குடும்பத்தினருடன் காணப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன சிறுவர்கள் குறித்து தகவல் வழங்க விரும்புவோர் பின்வரும் வழிகளில் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• 1-888-710-9090 என்ற எண்ணை அழைக்கலாம்
• பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை அளிக்க வேண்டும்
• நீதிமன்றத்தில் சாட்சி வழங்க அழைக்கப்படலாம்
• அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்
பெயர் தெரியாமல் தகவல் வழங்க விரும்பும் நபர்கள், 1-800-222-TIPS (8477) என்ற Crime Stoppers இலக்கத்திற்கு தொடர்புகொளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.