மீண்டும் கிம் ஜாங் மனைவி பேச்சு
மர்மங்களுக்கு புகழ்பெற்றது, மேற்காசிய நாடான வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் குடும்பம். நடுவில் திடீரென காணாமல் போன கிம் ஜாங், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக, கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு என, பல வதந்திகள் வெளியாயின.கடந்த, 2009ல், கிம் ஜாங் மற்றும் ஜூ திருமணம் நடந்தது. கடந்த, 2011ல், நாட்டின் தலைமை பொறுப்பை கிம் ஜாங் ஏற்ற பிறகே, ஜூ குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கின. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் தலைவர் இரண்டாம் கிம் ஜாங் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில், மனைவி ஜூ மற்றும் உன் பங்கேற்றனர். அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்றனர்.