சீனாவில் டெல்டா வைராஸால் மீண்டும் வேகமெடுத்துள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை
சீனாவில், திடீரென தொற்றின் அளவு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செவ்வாயன்று, சீனாவில் 43 பேர் புதிதாக புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் காரணமாக, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகின்றது.
இருப்பினும், டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்ட சமீபத்திய பரவல் அதிகரிப்பு சீன அதிகாரிகளை பிரச்சனைக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் சீனாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள "மக்கள் போரின்" ஒரு பகுதியாக வெகுமதி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல், சட்டவிரோதமாக நடக்கும் வேட்டைகள் மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடித்தல் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பற்றி அறிந்தால், அவற்றைப் பற்றி விரைவாகப் புகாரளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் கொரோனா தொற்றுநோய் மீண்டும் அதிகரித்ததன் காரணமாக சீனாவில் மில்லியன் கணக்கானவர்கள் ஊரடங்கு (Lockdown) நிபந்தனைகளின் கீழ் மீண்டும் தள்ளப்பட்டார்கள். உள்நாட்டுப் பயணம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், பல விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.