சுவிஸில் பிச்சைக்காரர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை! ஆனால் ஒரு நிபந்தனை?
சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாஸலில், பிச்சைகாரர்களுக்கு வழங்கியுள்ள சலுகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது அங்குள்ள பிச்சைகாரர்கள் ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணிக்க பாஸல் நகரம் வவுச்சர் ஒன்றை வழங்கிறது. ஆனால் அதற்கு ஈடாக நாங்கள் மீண்டும் சுவிஸிக்கு திரும்ப வரமாட்டோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புக்கொள்ளும் பிச்சைகாரர்களுக்கு, நகரின் குடிவரவு சேவை, ரயில் வவுச்சர்களையும், 20 சுவிஸ் பிராங்க் வழங்குகிறது. இந்த வவுச்சரை பெற, குறிப்பிட்ட காலம் வரை சுவிஸிக்கு திரும்பி வரமாட்டேன் என பிச்சைகாரர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை மீறி வந்து பிடிப்பட்டால் நாடு கடத்தும் நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த சலுகையை இதுவரை மொத்தம் 31 பேர் ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.