12 வயதில் நிறுத்திய படிப்பை 85 வயதில் முடித்த மூதாட்டி
தனது 12 வயதில் நிறுத்திய படிப்பினை சுமார் 73 வருடங்கள் கழித்து மூதாட்டி ஒருவர் நிறைவு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1948 ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் பொது ஜிஹாத் பூட்டோ என்ற 12 வயது சிறுமி நப்லஸ் குடும்பத்துடன் நகரைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில் திருமணம் ஆகி 7 குழந்தைகளுக்கு தாயான புட்டோ கல்வி மீது கொண்ட தீரா தாகத்தால் தனது 81 வயதில் படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார்.
பின்னர் கபார் பாரா என்ற இஸ்லாமிய ஆய்வு கல்லூரியில் இணைந்த புட்டோ கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.
தற்போது அவர் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.