கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதியவர்!
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 112 வயதை கடந்த முதியவர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் இடம்பிடித்துள்ளார்.
வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919 அன்று பிறந்துள்ளார். தற்போது சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியாவுக்கு 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது.
மேலும் இவருக்கு 7 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ஆனால், குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே தனது மனைவி இறந்து விட்டதாக முதியவர் கூறியுள்ளார்.
தற்போது சாசாதுர்னினோவை ஒரு மகள் மற்றும் மகன்தான் பார்த்து வருவதாகவும், தனக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
covid-19 காரணமாக குடும்பத்தினரை கடந்த 18 மாதங்களாக சந்திக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும், தற்பொழுது 112 வயது நிறைவடைந்து உள்ளதை அனைவருடனும் கொண்டாடியது மகிழ்ச்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.