கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா; மூன்றாவது நாளாகவும் 3 இலட்சம் பேருக்கு தொற்று
கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி இன்று தொடர்ந்தும் 3 ஆவது நாளாக 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.
சரியாக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1 கோடியே 66 இலட்சத்து 10 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 38 இலட்சத்து 67 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 89 ஆயிரத்து 544- ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்து 52 ஆயிரத்து 940 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.