மெக்சிகோவில் ரயில் மோதி நபர் பலி
மெக்சிகோ நகரில் போட்ரெரோ மற்றும் லா ராசா நிலையங்களுக்கு இடையே ரயில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் ஓன்று இடம் பெற்றுள்ளது.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்குள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அவர்கள் ஏழு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ரயில் ஓட்டுனர் உட்பட 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மெட்ரோ ரயில்களில் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து வருவதோடு மே 2021 இல் ஒரு ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 26 பேர் கொல்லப்பட்டடு 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பராமரிப்பு குறைபாடுகள் விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.