றொரன்டோவில் பரபரப்பு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
றொரன்டோவில் பரபரப்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
றொரன்டோவின் வெஸ்டன் மற்றும் லோரன்ஸ் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதாக சில பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக அறிவித்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.