ஒன்றாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
ஒன்றாரியோவின் ஸ்டோனி கிரீக் என்னும் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் ஸ்டோனி கிரீக்கின் புருடிலாண்ட் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து காரணமாக அனைத்து றொரன்டோ வழி பாதைகளும் மூடப்பட்டன. அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனமொன்றின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொரு சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.