ஒன்ராறியோ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில்
ஒன்ராறியோ மில்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹால்டன் பிராந்திய போலீசார் பொலிஸார் கூறியுள்ளனர்.
டெர்ரி ரோடு மற்றும் ஜேம்ஸ் ஸ்னோ பார்க்வே சந்திப்பில் நேற்று பிற்பகல் 3:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். டெர்ரி வீதியில் கிழக்கு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஹூண்டாய் டக்ஸன் வாகனத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 79 வயது பெண் மற்றும் 86 வயது முதியவர், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹால்டன் பிராந்திய பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.