இன்று முதல் கனேடிய மாகாணம் ஒன்றில் வயதுவந்த அனைவருக்கும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி
இன்று முதல், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள, முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியாக பைசர் அல்லது மொடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், தடுப்பூசி பெற்றுக்கொண்டு 28 நாட்கள் ஆனபட்சத்தில், தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆஸ்ட்ராசெனகா நிறுவன தடுப்பூசியை முதல் டோஸ் தடுப்பூசியாக பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் எட்டு வாரங்களாவது காத்திருக்கவேண்டும்.
அவர்கள் அதே நிறுவன தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம், அல்லது மற்றொரு mRNA தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம்,
ஒன்ராறியோ மாகாணம் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலுக்கு செல்ல இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த இரண்டாவது டோஸ் தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.