மூவரை பலியெடுத்த Ontario விபத்து
கனடா - ஒன்டாரியோ ப்ரோக் டவுன்ஷிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் டர்ஹாம் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட குறித்த கார் விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை பலத்த காயம் அடைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் கூறுகின்றனர்.