கனடாவில் நடு வீதியில் திடீரென தீப்பற்றி எரித்த வாகனம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
கனடாவில், நடு வீதியில் திடீரென வாகனமொன்று தீப்பற்றிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ரொறன்ரோவில் அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை ஐந்து நபர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.
வாகனம் முற்று முழுதாக தீப்பற்றிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
வாகனம் தீபற்றிக் கொள்ளும் போது அருகாமையில் இருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குறித்த வாகனத்தின் சாரதியை மீட்டுள்ளனர்.
துணிகரமாக தீ விபத்தில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு எடுத்த அனைவருக்கும் பொலிஸார் தங்களது நன்றியை பாராட்டியுள்ளனர்.
காருக்கு பலத்த சேதும் ஏற்பட்ட போதிலும் வாகனம் கடுமையான தீ விபத்துக்கு உள்ளாகிய நிலையிலும் 36 வயதான சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடப்படகின்றது