ரஷ்யா பின்வாங்கியதால் உக்ரைனுக்கு கிடைத்த வாய்ப்பு!
ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் கார்கிவ் நகரத்தின் மீது நடத்தி வந்த தாக்குதலில் இருந்து நேற்று பின் வாங்கியது.
இதனையடுத்து கார்கிவ் நகரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை மீண்டும் உக்ரைன் தொடங்கியுள்ளது.
அத்துடன் கார்கிவ் நகரில் போரினால் சேதமடைந்த இரு விநியோக நிலையம் சரி செய்யப்பட்டு, 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.