பிரித்தானியாவில் பிரதமராக இந்திய வம்சாவளி ரஷி சுனக்கிற்கு அரிய வாய்ப்பு!
பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் (Boris Johnson) நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறியுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் போட்டியில் தாம் பங்கேற்க உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (Rishi Sunak) அறிவித்துள்ளார்.
I’m standing to be the next leader of the Conservative Party and your Prime Minister.
— Ready For Rishi (@RishiSunak) July 8, 2022
Let’s restore trust, rebuild the economy and reunite the country. #Ready4Rishi
Sign up ? https://t.co/KKucZTV7N1 pic.twitter.com/LldqjLRSgF
கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் நிற்கிறேன் என்றும், தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் இது சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.