பிரான்ஸில் கட்டாய சுகாதார திட்டத்திற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் மீது தாக்குதல்
பிரான்ஸில், ஹெல்த் பாஸ் திட்டதை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், தாக்குதல் நடத்தியதால் மோதல் வெடித்தது.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஹெல்த் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் Toulouse-ல் நடந்த போராட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.