ஹெய்ட்டி மற்றும் சிரிய அகதிகள்: கனடாவிற்குள் மீண்டும் நுழைய முடியுமா?
அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான ஹெய்ட்டி நாட்டினரும், சுமார் 6,000 சிரிய நாட்டினரும் தங்களது 'தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை' இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், அவர்கள் மீண்டும் கனடாவிற்குள் பெருமளவில் தஞ்சமடைய முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாத வெளிநாட்டினருக்கு அமெரிக்கா TPS என்ற பாதுகாப்பை வழங்கி வந்தது.

ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நாடு கடத்தப்படும் அபாயத்தைச் சந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் அமெரிக்காவில் பாதுகாப்பு அந்தஸ்தை இழக்கும் பலர் கனடா எல்லை வழியே, குறிப்பாக 'ராக்ஸாம் ரோடு' போன்ற உத்தியோகபூர்வமற்ற எல்லைப் பாதைகள் வழியாகக் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் போக்கு காணப்பட்டது.
எனினும், தற்போதைய சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது என தொராண்டோவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக் தெரிவித்துள்ளார்.
கனடா அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் ஹெய்ட்டி மற்றும் சிரியா நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவதில்லை.
எனவே, ஏற்கனவே கனடாவிற்குள் இருப்பவர்கள் மனிதநேய அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், புதிதாக அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைவது சாத்தியமற்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.