கனேடிய மருத்துவமனை ஒன்றில் தண்ணீரில் நோய்க்கிருமிகள்: தண்ணீர் வழங்கல் நிறுத்தம்
கனேடிய பொது மருத்துவமனை ஒன்றில் பயன்பாட்டிலிருக்கும் தண்ணீரில் ஒருவகை நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Ottawa பொது மருத்துவமனையில், லீஜியோனெல்லா எனப்படும் அந்த நோய்க்கிருமியால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பரிசோதனைகளில் அந்த ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் நோய்த்தொற்று இல்லை என தெரியவந்தது.
என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையின் சில பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
அங்கு தண்ணீரில் கிருமிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த லீஜியோனெல்லா கிருமி தண்ணீர்த் துளிகள் காற்றில் பரவும்போது அதை சுவாசிப்பதால் நோயை உண்டாக்கும். நோயெதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பவர்களுக்கு அதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியில் பிரச்சினை உடையவர்களுக்கு அது நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.