மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து; 82 பேர் பரிதாப பலி
ஈராக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதுடன் நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் தீ பரவியதால், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற முடியாமல் பலியானதாக கூறப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விரிவான விசாரணை நடத்தி தக்க தண்டனை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.