நினைத்துப்பார்க்க முடியாத வலி; மனம் திறந்த பில்கேட்சின் முன்னாள் மனைவி!
பில்கேட்சும்(Bill Gates) அவரது மனைவியும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். உலக பெரும்பணக்காரரான பில்கேட்சுக்கும்(Bill Gates) , மெலிண்டா பிரஞ்ச்(Melinda French) என்பவருக்கும் கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, கருத்துவேறுபாடு காரணமாக பில்கேட்ஸ் (Bill Gates) - மெலிண்டா(Melinda French) தம்பதி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்து பெற்றபோதிலும் தாங்கள் இருவரும் சேர்ந்து அமைத்த அறக்கட்டளையில் பில்கேட்ஸ்(Bill Gates) - மெலிண்டா(Melinda French) தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பில்கேட்சின்(Bill Gates) முன்னாள் மனைவி மெலிண்டா நேற்று அமெரிக்காவின் பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது, அவரிடம் பில்கேட்சிடமிருந்து(Bill Gates) விவாகரத்து பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மெலிண்டா(Melinda French), திருமண உறவில் நீடிக்காததற்கு எனக்கு சில காரணங்கள் இருந்தன.
ஆனால் கொரோனா காலத்தின் வித்தியாசமான விஷயம் என்னவென்றால், நான் செய்ய வேண்டியதை செய்வதற்கான தனியுரிமையை அது எனக்கு கொடுத்தது.
பில்கேட்சிடமிருந்து(Bill Gates) விவாகரத்து எண்ணற்ற வழிகளில் நினைத்துப்பார்க்க முடியாத வகையிலான வலியாக இருந்தது. ஆனால், அதை கடந்து செல்ல எனக்கு தனியுரிமை இருந்தது.
நான் விலகிச்சென்ற நபரிடம் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தவேண்டும்.
காலை 9 மணிக்கு நான் அழுதுகொண்டிருந்தாலும், நான் விலகிச்சென்ற நபருடன் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் இணைந்து எனது திறனை வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.