கர்ப்பிணி பெண் தலையில் ஆணியை அடித்த நபர்! தீவிர தேடுதலில் பொலிஸார்
ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் இடம்பெறும் கொடூரமும் நடைபெறுகிறது.
அந்த வகையில் பாகிஸ்தானில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவது, பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், அடுத்து பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறியுள்ளார். அவரும் கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்துள்ளார்.
இதனிடையே, கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த புகைப்பட காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, பெஷாவர் பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வைத்தியர்கள் தெரிவிக்கையில்,
அந்தப் பெண்ணின் தலையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. சுத்தியின் மூலம் அந்த ஆணியை அடித்திருக்க வேண்டும். அவரது தலையில் 2 இஞ்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது எக்ஸ்ரேவில் தெரிந்தது.
ஆணியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என தெரிவித்தனர்.
ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.