ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் நாஸ்ட்ரடாமஸ் பகீர் தகவல்!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் போரானது, 2023இல் மிகப்பெரிய போராக வெடிக்கலாம் என Les Propheties என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த புத்கத்தை பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 1555ம் ஆண்டு எழுதியுள்ளார். புத்தகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் உருவாகியுள்ள போர், 2023இல் மிகப்பெரிய போராக வெடிக்கலாம் என அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாஸ்ட்ரடாமஸ் அந்த புத்தகத்தில் Seven months the Great War, people dead of evil-doing என குறிப்பிட்டுள்ளார். அதாவது ஏழு மாதங்களுக்கு ஒரு பெரும் போர் நடைபெறும், அதனால் பலர் கொல்லப்படுவார்கள் என்பது அதன் பொருளாகும்.
இந்த விடயம் தற்போது உக்ரைன் ரஷ்யப் போருடன் ஒப்பிடப்படுகின்றது. அதாவது, ஆண்டு உருவாக இருக்கும் மூன்றாம் உலகப்போரைக் குறிக்கும் ஒரு விடயம் என பார்க்கப்படுகின்றது.