பிரபல நாடொன்றினால் கைதுசெய்யப்பட்ட 80 இந்திய மீனவர்கள் விடுதலை!
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வெளி நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
அந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கராச்சி மாலிர் சிறையில் இருந்த 80 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அல்லாமா இக்பால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்கள் லாகூர் சென்றடைந்த நிலையில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுள்ளனர்.