பெண் ஊடகவியலாளருக்கு கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர்; பெரும் அதிர்வலை
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது.
பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அதேநேரத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமர்சனப் பதிவுகள்
இதையடுத்து அகமது ஷெரீப்பிற்கு இணையத்திற்கு விமர்சனப் பதிவுகள் கொட்டத் தொடங்கின. ’அவர் ஒரு தொழில்முறை சிப்பாய் அல்ல’, ’இது அவர்களின் இராணுவம் எவ்வளவு தொழில்முறையற்றது என்பதைக் காட்டுகிறது’, ’சீருடையில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பொதுவில் கண் சிமிட்ட முடியும்’ எனப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Believe me, he is a top rank army officer in uniform.... pic.twitter.com/GDjduiCY8m
— OsintTV 📺 (@OsintTV) December 9, 2025
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி உள்ளார்.
அவர் ஊடகச் சந்திப்பு ஒன்றில், பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது