பாகிஸ்தானின் வணிக வளாக தீ விபத்து ; பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
குறித்த தீவிபத்தானது கடந்த 17-ந்திகதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.

இந்த நிலையில் ஒரே கடையில் 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Unfortunately, another preventable tragedy in Karachi. The Gul Plaza fire isn’t just an accident; it’s a failure of safety standards and infrastructure. How many more lives and livelihoods must be lost before we take fire safety seriously? 😡
— Bilal Ahmed (@bilaltistic) January 19, 2026
#GulPlaza #Karachi #SafetyFirst… pic.twitter.com/CDD4G7eXxg