இந்தியாவின் வாழைப்பழங்கள் குறித்து பாகிஸ்தானில் விவாதம்: வைரலாகும் வீடியோ
இந்தியாவில் கிடைக்கும் வாழைப்பழங்கள் குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை அல்வீனா ஆகா என்ற பெண் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
அந்நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணரான கவாஜா நவீத் அகமது பங்கேற்றிருந்தார். அப்போது, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டது வாழைப்பழங்களை தான், அதாவது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் விளையும் வாழைப்பழங்கள், விரல் அளவுக்கே உள்ளன.
அதே நேரத்தில், இந்தியாவின் மும்பையில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பெரியதாக இருக்கின்றன’ என அவர் குறிப்பிட்டார். அதைக் கேட்டதும், தொகுப்பாளர் ஆகா சிரித்தார்.
இந்தியாவில் வாழைப்பழங்கள் எப்படி பெரிதாக வளர்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
வங்கதேசத்தின் டாக்காவிலும் வாழைப்பழங்கள் பெரிதாக இருக்கின்றன. அதை இறக்குமதி செய்ய வேண்டும் என, கவாஜா நவீத் அகமது குறிப்பிட்டார்.
அப்போதும் தொகுப்பாளர் அல்வீனா ஆகா, விழுந்து விழுந்து சிரித்தார். இது தொடர்பான ‘வீடியோ’ தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.