இந்திய பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்
இரண்டு அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிடையேயான வேறுபாடுகளைக் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதமொன்றை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தின் மூலமாக வேறுபாடுகள் களையப்படுமானால் தெற்காசியாவிலுள்ள பில்லியன் கணக்கானோர் பயன் பெறுவர் என ரஷ்யா டுடேயுடனான நேர்காணலொன்றில் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பதிலளிக்க வினவப்பட்டதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு உடனடியாக பதிலளித்திருக்கவில்லை.
இதன்படி இந்தியா எதிரி நாடானதால், அவர்களுடனான வர்த்தகம் குறைந்ததாக பிரதமர் கான் கூறியுள்ளார்.