இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் அதிரடி கைது!
இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (20) காலை குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
57 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.
7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை குறித்த பெண் கொண்டு வந்ததாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.