ஐ.நா. டிரக்குகளை வழிமறித்து, உணவுப் பொருட்களை அள்ளிச்சென்ற பாலஸ்தீன மக்கள்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது.
இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கியமான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பிணைக் கைதிகளை
இதனைத்தொடர்நது காசா முனைக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல ஐ.நா-வுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து 77 கனரக வாகனங்களில் (Trucks) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஐ.நா. உலக உணவு திட்டம் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.
குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்னதாகவே பாலஸ்தீனர்கள் டிரக்குகளை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அத்துடன் உணவுப் பொருட்களை முண்டியடித்துச் சென்று அள்ளிச் சென்றனர். 12-க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உள்ள பொருட்கள் அள்ளிச் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா 60 நாட்களாக போர் நிறுத்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இதை ஆய்வு செய்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளார்.
60 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் வகையில் அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது. அப்போது ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 58 பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். உதவிப்பொருட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.