பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
பாமாயில் ஏற்றுமதிக்கான தடை இம்மாதம் 23ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
இந்தோனேசியா கடந்த ஏப்ரல் 28ம் திகதி பாமாயில் ஏற்றுமதியை நிறுத்தியதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாமாயிலை ஏற்றுமதி செய்யும் இந்தோனேசிய அரசின் முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.