பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து: 16 பேருக்கு நேர்ந்த சோகம்
பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் மத்திய ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 9:23 மணியளவில் மத்திய ரஷ்யாவில் இன்று இடம்பெற்றுள்ளது.
டாடர்ஸ்தான் குடியரசின் மீது பறக்கும் போது 23 பேருடன் சென்ற எல் -410 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சிக்கிய விமானத்தின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஆறு பேரை மீட்டுள்ளதாக மீட்புகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிர் பிழைத்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் ரஷ்யாவின் கிழக்கில் பழைய அன்டோனோவ் ஆன் -26 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஜூலை மாதம், கம்சட்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.