புறப்படவிருந்த விமானத்தில் ரகசியமாக ‘வேப்பிங்’ செய்த பயணியால் பரபரப்பு
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே நகருக்கு செல்லவிருந்த ரியான்ஏர் (Ryanair) விமானத்தில் பயணி ஒருவர் (e-cigarette) பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பயணி, விமானத்தின் கழிவறையில் ரகசியமாக ‘வேப்பிங்’ (e-cigarette) செய்ததால், விமானம் புறப்படுவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
விமான ஊழியர்களின் கடுமையான எச்சரிக்கை
விமான ஊழியர்களின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அந்தப் பயணி இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாதுகாப்பு கருதி, அந்தப் பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்தப் பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
விமானத்தில் வேப்பிங் செய்வது அல்லது புகைபிடிப்பது கடுமையான குற்றம். இது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனபது குறிப்பிடத்தக்கது.