பெகாசஸ் பற்றி பேசத் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்துக்கு பிரெஞ்சு அதிபர் மேக்ரான் அழைப்பு
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெகாசஸ் எனப்படும் மென்பொருள் மூலம் செல்பேசி வழியே உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்துப் ஆலோசிக்க தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்திச் செல்பேசி வழியாக உலகம் முழுவதும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் நாளிதழ்கள் தெரிவித்தன.
அதில் இம்மானுவேல் மேக்ரானின் ஒரு செல்பேசி எண்ணும், பிரெஞ்சு அமைச்சர்கள் பலரின் எண்ணும் மொராக்கோவில் இருந்து உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்துத் தங்கள் உளவு மென்பொருளின் இலக்காக மேக்ரான் இல்லை என இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்துக்கு இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.