பிரிடிஷ் கொலம்பியாவில் வாகன விபத்தில் 19 வயது இளைஞன் பலி
பிரிடிஷ் கொலம்பியாவின் பிரின்ஸ் ஜார்ஜ் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணியளவில் 15 அவென்யூவின் 3700வது பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணமடைந்த இளைஞர், அந்த இரவில் ஒன்றுகூடியிருந்த ஒரு குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இதே குழுவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரால் இயக்கப்பட்ட வாகனம் இவரை மோதி காயமடையச் செய்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தற்போது 19 வயதுடைய ஓர் இளம்பெண், போதைமருந்து அல்லது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றார் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.