வனவிலங்குகள் தொடர்பில் கடும் அபராதம் அறிவித்த வான்கூவர் பூங்கா
வான்கூவர் நகர பூங்காக்களில் வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் 500 டொலர் அபராதம் விதிக்கப்படும் என பூங்கா வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வான்கூவர் நகரத்தின் மிகப்பெரிய பூங்காக்களில் கொயோட் தாக்குதல்கள் அதிகரிப்பால் பூங்கா நிர்வாகிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மேலும், பூங்காக்களில் மக்கள் இனி எந்த விலங்குகளுக்கும் உணவளிக்க வேண்டாம் என்றே நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வார காலம் கொயோட்களை கொல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஸ்டான்லி பார்க் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நான்கு கொயோட்கள் சிக்கி கருணைக்கொலை செய்யப்பட்டதாகவும், ஜனவரி முதல் பூங்காவிலிருந்து அகற்றப்பட்ட கொயோட்டுகளின் எண்ணிக்கை 11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மொத்தம் 45 கொயோட் தாக்குதல் பதிவாகியுள்ளது. இதில் சிறார்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொயோட்களுக்கு மக்கள் உணவளிப்பதால் மட்டுமே இந்த தாக்குதல் அதிகரித்து காணப்படுவதாக பூங்கா நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
இதனாலையே, தற்போது கொயோட்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை தடை செய்யவும் அபராதம் விதிக்கவும் வான்கூவர் பூங்கா நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது.