ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு ஆர்வம் காட்டாத மக்கள்...அதிரடி முடிவெடுத்த வைத்தியசாலைகள்
உலகின் முதலாவது கொரோன தடுப்பூசியாக உருவான ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதால் அதற்கான கொடுக்கப்பட்ட ஆடர்களை எல்லாம் தற்போது தனியார் மருத்துவமனைகள் ரத்து செய்து விட்டன.
ஏனனெனில் 18 வயதிற்கு அதிகமானோருக்கு அரசே கோவிஷியல்ட் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி வருகிறது,இதனால் இந்த தடுப்பூசியைக் காட்டிலும் 47 சதவீத விலை அதிகமுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் முன்பு ஆர்டர் செய்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளே தற்போது தேங்கியுள்ள நிலையில் புதிதாக கொடுத்த ஆர்டர்களை புனே,ஐதராபாத் போன்ற மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ரத்து செய்துள்ளன.