பிரேசில் அதிபருக்கு மறுக்கப்பட்ட அனுமதி
பிரேசில் அதிபரான ஜெயீர் போல்சனரோவுக்கு கால்பந்தாட்ட மைதானத்திற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ அவர்கள் காரோண ஒரு சாதாரண காய்ச்சல் என கூறி எந்த ஒரு நடவடிக்கையையும் அந்நாட்டில் எடுக்கவில்லை . மேலும் தடுப்பூசி செலுத்தவும் செலுத்திக்கொள்ளவும் அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ தனது குடும்பத்தோடு உள்நாட்டு கால்பந்து போட்டியினைக் காண மைதானத்துக்கு சென்றுள்ளார். ஆனால் மைதானத்தின் அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
ஏனெனில் அவர் தடுப்பூசி செலுத்தாத காரணத்திற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த விடயம் குறித்து பேசிய பிரேசில் அதிபர் கூறுகையில்,
"நான் கால்பந்தாட்டத்தை பார்க்க விரும்பினேன். அதற்கு எதற்கு தடுப்பூசி. தடுப்பூசி செலுத்தியவர்களைக் காட்டிலும் தனக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது" என அவர் தெரிவித்தார்.