பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் இரு வாள்களுடன் கைது
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லாறு பகுதியில் கடந்த இரவில் வன்முறை சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து இரு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் காயமடைந்த பொலிஸார் நாள்வரை தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.