கொரோனாவுக்கு மாத்திரை உருவாக்கியுள்ள Pfizer நிறுவனம்
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை உயிரிழக்கும் அபாயத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், எங்களது கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பேருக்கு அளித்து பரிசோதிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், மாத்திரையுடன் சேர்த்து தீநுண்மி எதிர்ப்பு மருந்தும் அளிக்கப்பட்டது.
இந்த மருந்துகளால் நோயின் தீவிரமடையும் தன்மை 89 சதவீதம் குறைந்தது தெரியவந்தது, மேலும், அந்தக் குழுவில் யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை.
சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படாத குழுவினரில் 7 சதவீதத்தினா் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவா்களில் 7 போ் உயிரிழந்தனா் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.