அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூட்ரேட் தான் அரசியலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக அடுத்த ஆண்டு நடைபெறும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப்பபோவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் ஒருமுறை தான் அதிபர் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் எச்சரித்தனர்.
இந்த நிலையில் தற்போது தனது பதவிக்காலம் முடிந்தவுடன் அரசியலிலிருந்து அவர் ஓய்வு பெறவுள்ளதாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவரது ஆட்சி காலத்தில் 6000க்கும் அதிகமான கடத்தல்காரர்கள் கொலைசெய்யப்பததால் சர்வதேச நீதிமன்றத்தில் இவர் பெயரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.