குடும்பத்துடன் கனடாவில் வசிக்க வேண்டும்... விசா கேட்டு கெஞ்சும் லண்டன் வாழ் இளைஞர்
ஒன்றாரியோவின் லண்டன் நகரில் வசிக்கும் இளம் வயது தந்தை தமது குடும்பத்துடன் கனடாவில் வசிக்க விசா கேட்டு ஓராண்டாக போராடி வருகிறார்.
லண்டன் வாழ் Vikas Kaushal இந்தியாவில் வசிக்கும் தமது மனைவிக்கான விசா கேட்டு 2020 ஜனவரி மாதம் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கவுஷலின் மனைவி 5 மாதங்களுக்கு முன்னர் தாயானார். அப்போது முதலே, தமது குடும்பத்தை கனடாவுக்கு கொண்டுவர கவுஷல் தொடர்ந்து போராடி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் குழந்தையை பார்க்கும் பொருட்டு கவுஷல் இந்தியாவுக்கு சென்றுள்ளார். விசா தொடர்பில் துரித நடவடிக்கை முன்னெடுப்படும் என நம்பியிருந்த அவரால், தற்போது கொரோனா சிக்கல் காரணமாக கனடா திரும்ப முடியாமல் உள்ளார்.
தமது குடியிருப்புக்கு சுற்றும் இருப்பவர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்துவரும் நிலையில், தமது பிஞ்சு குழந்தையையும் தாயாரையும் பாதுகாக்க தாம் போராடி வருவதாக கவுஷல் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இக்கட்டான நிலை நீடிப்பதால், தூதரகங்களில் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியுள்ளது.
இதனிடையே, தமது குழந்தை நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பத்தை காப்பாற்றவேனும் விசா அனுமதியுங்கள் என கவுஷல் கெஞ்சியுள்ளார்.
ஆனால் கவுஷலின் இதே நிலைமையில் பலர் இருப்பதாகவும், கனேடிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், கவுஷலின் நிலை சீராக இன்னும் கால தாமதமாகலாம் என்றே கூறப்படுகிறது.