ஏதிலிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க பாரிய மதில் அமைத்த போலந்து
ஏதிலிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் போலந்து அரசாங்கம் எல்லைப் பகுதியில் பாரிய மதில் ஒன்றை உருவாக்கியுள்ளது.
பெலாரஸிலிருந்து போலந்து ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு பிரவேசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
போலந்து பிரதமர் மாட்டியூஸ் மொராவியிக்கி மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இன்றைய தினம் இந்த பாரிய இரும்பு மதிலை அதிகார பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
பெலாரஸிலிருந்து போலந்து எல்லைக்குள் பிரவேசிக் முயற்சித்த சுமார் 20 ஏதிலிகள் கடும் குளிர் உள்ளிட்ட சில காரணிகளினால் உயிரிழந்தனர்.
இந்த மதில் உருவாக்கமானது ரஸ்யாவிற்கு எதிரான போரின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டுமென போலந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, போலந்து அரசாங்கம் வெள்ளை கிறிஸ்தவ ஏதிலிகளை வரவேற்கும் அதேவேளை, இஸ்லாமிய ஏதிலிகளை நிராகரிப்பதுடன் ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, போலந்து பெலாரஸ் நாடுகளுக்கு இடையில் 18 அடி உயரத்திற்கு நிர்மானிக்கப்படும் இந்த மதில் சுவர் சுமார் 180 கிலோ மீற்றர் வரையில் முழுமையாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.