ஒன்ராறியோவில் 27 பேர் கொண்ட மர்ம கும்பலை கைது செய்த பொலிஸ்!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 27 பேர் ஒன்ராறியோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 48 துப்பாக்கிகளும், 7 இலட்சத்து 30 ஆயிரம் டொலர் பணமும், இரண்டரை மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏப்ரல் 8ஆம் திகதி ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் 50 இடங்களில் ஒரே நேரத்தில் தேடுதல்கள் நடத்தப்பட்ட போதே, 10 கிலோ கொகைன் , எட்டு கிலோ கெடமைன் , மூன்று கிலோ ஹெரோயின் மற்றும் இரண்டரை கிலோ ஓபியம் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் யோர்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 27 பேர் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் பிராம்டனையும், 4 பேர் ரொறன்ரோவையும், சேர்ந்தவர்களாவர்.