றொரன்டோவில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! ரோந்துப்பணிகள் தீவிரம்
றொரன்டோவின் சில பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரில் இடம்பெற்று வரும் வாகனக் கொள்கைச் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நகரின் சில பகுதிகளில் ஆயுத முனையில் வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப் பகுதியில் 93 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டு முழுவதிலும் றொரன்டோவில் 103 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பதிவான வாகனக் கொள்ளைச் சம்பவங்களில் 64 சம்பவங்கள் ஆயுத முனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிஸார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.