பஸ்ஸில் பெண் மீது தீ மூட்டிய நபருக்கு எதிராக குரோதச் செயல் குற்றச்சாட்டு
றொரன்டோவில் பஸ் ஒன்றில் பெண் மீது தீ மூட்டிய சந்தேக நபருக்கு எதிராக குரோதச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோ பொலிஸார் குறித்த நபர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கிப்லிங் பஸ் நிலையத்தில் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண் மீது எரியக் கூடிய திரமொன்றை ஊற்றி தீ மூட்டியதாக பொலிஸார், சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
தீ மூட்டப்பட்ட பெண்ணை ரீ.ரீ.சீ போக்குவரத்து சேவை பணியாளர்களும் சக பயணிகளும் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் மீது தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றதாகவும் பின்னர் பொலிஸார் அவரை மடக்கி பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான டென்ஸின் நோர்பூ என்ற நபரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். கொலை முயற்சி, ஆயுத தாக்குதல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
குரோதச் செயலின் அடிப்படையிலான ஓர் குற்றச் செயல் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.