ரொறன்ரோவில் பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
ரொறன்ரோவில் போலி டெக்ஸி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நல் உள்ளம் படைத்தவர்களை இலக்கு வைத்து சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வாறான மோசடிகள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோசடி சம்பவங்கள் டெக்ஸி தரிப்பிடம் அல்லது வாகன நெரிசல் மிக்க இடங்களில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடி சம்பவங்களில் போலியாக ஒருவர் டெக்ஸி சாரதி போலவும் மற்றுமொருவர் டெக்ஸி பயணி போலவும் தோன்றி மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என சாரதி கூறுவதனைப் போலவும், பயணி அருகாமையில் இருப்பவர்களிடம் பணம் தருகின்றேன் தமக்காக கட்டணத்தை கடன் அட்டை உள்ளிட்ட வங்கி அட்டைகளில் செலுத்துமாறு கோருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆபத்தில் இருக்கின்றார்கள் என மனம் உவது எவரேனும் அட்டைகளை வழங்கினால் அதன் தகவல்கள் களவாடப்படுவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பழக்கமில்லாத நபர்களிடம் கடன் அட்டையோ அல்லது வேறும் வங்கி அட்டைகளையோ கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.