நாய் ஒன்றை காரில் தனித்து விட்டுச் சென்ற பெண் குறித்து விசாரணை
கனடாவில் நாய் ஒன்றை காரில் தனித்து விட்டுச் சென்ற பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடா தின நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தவர்களில் பெண் ஒருவர் இவ்வாறு தனது காரில் நாய் ஒன்றை தனியாக விட்டுச் சென்றுள்ளார்.
கடும் வெப்பத்தில் தனியாக விடப்பட்டிருந்த நாய் பற்றி பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் நாயை மீட்டுள்ளனர். மிஸ்ஸிசாகுவாவின் யோர்க் புலுவார்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வளவு நேரம் நாய் தனித்து விடப்பட்டிருந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாகனங்களில் செல்லப் பிராணிகள் தனித்து விடப்பட்டிருப்பதனை அவதானித்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.